Pages

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் அமரர் சுபாலினி இளங்கோ



அமரர் சுபாலினி இளங்கோ

யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுபாலினி இளங்கோ அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் வீட்டின் தருவில் பழுத்த பலா
சூறைக் காற்றில் சூறையாடப் பட்டதேனோ?
அட்டதிக்கும் தேடுகின்றோம் அம்மா என்ற குரலுக்காய்
அசைபோட்டு வா மகளே அடைகாத்த தாய் மனமோ
அலைமோதிக் கிடக்குதம்மா அயர்ந்து உறங்க மறுக்குதம்மா..

ஏற்றிவிட்ட ஏணியொன்று சாய்ந்துவிட்ட கோலமென்ன
கணப்பொழுதும் இணைபிரியா உன் கை பிடித்த மன்னவனோ
களையிழந்து போனதென்னதன் நினைவிழந்து போகுமுன்னே
உன் புன்னகையை காட்டாயோ புதுப்பொலிவு பெற்றிடவே..

உதிரத்தில் சுமந்து தன் உதிரத்தால் பால்தந்து
உயிர் கொடுத்த அன்னையவள் நிலைகுலைந்து போனதென்ன
வெற்றிட மானதம்மா பெற்ற மடி
நீ குடியிருந்த கோவிலுக்குள் இருள் சூழ்ந்த மாயமென்ன..

பட்டப்பகலில் பலபேர் பார்த்திருக்க
பரம்பரைச் சொத்தொன்று
மறைந்து விட்ட மாயமென்ன
கலங்கரை விளக்கொன்று களவாடப் பட்டதென்ன
கல்வி மான் ஒன்று காணாமல் போனதெங்கே?

கண்ணிமை போலே உன்னை வளர்த்திடவே தன்னையே
தேய்த்துத் தந்த சந்தனமாம் தந்தையுள்ளம்
தலை விதியை  நொந்து நொந்து
தன்  முகவரியை தொலைத்ததம்மா
உன் ஒளிமுகத்தை காணாமல்...

தம் உள்ளே உன்னை வைத்து உன்னுள்ளே தம்மை வைத்த
தமைக்கைகளாம் இரு சக்கரங்கள் வழிநடத்த நீயின்றி
வலு இழந்து போனதம்மா மண்ணில் புதையுண்டு போனதம்மா
கட்டி இழுத்து வந்து கரைசேர்த்து விட்டுவிட்டால்
புதுப்பாதை போட்டு புதுப்பயணம் தொடங்கிடுவோம்

எனக்குத்தாய் ஆகியாள் என்னையீங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் - தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு - நாலடியார்
ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!
எமது பேரன்புக்குரிய சுபாலினி இளங்கோ அவர்கள் நோயுற்ற போது சிகிச்சையளித்த வைத்தியர்கள், அவர் அமரத்துவம் அடைந்தபோது நிகழ்வுகளை நடாத்தியும், கண்ணீர் அஞ்சலிகள், பதாதைகள், மலர் வளையங்கள் சமர்ப்பித்தும், எமது துயரில் பங்கு கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பீடாதிபதிகள் மாணவர்கள், பல்கலைக்கழகச் சமூகத்தினர், மரணச் சடங்கில் கலந்துகொண்டு ஆறுதல் கூறியும், பல்வேறு வழிகளில் உதவியும், ஓத்தாசையும் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலிருந்தும் அனுதாபச் செய்திகளை தொலைபேசி வாயிலாகவும், ஏனைய தொடர்பு சாதனங்கள் வாயிலாகத் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையங்கள், பதாகைகள், கண்ணீர் அஞ்சலிகளை வெளியிட்டுத் துயர் பகிர்ந்தோருக்கும், துயர் என்ற நினைவு மலரை அச்சிட்டு உதவிய தனியார் நிறுவனத்திற்கும், அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அந்தியேட்டிக் கிரியைகளில் கலந்துகொண்டோர்க்கும், ஏனைய சகலவிதத்தில் உதவியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு
இளங்கோ(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773600251
நிர்மலராஜன்(அத்தான்) — கனடா
தொலைபேசி:+19057933716
பாலமுருகன்(அத்தான்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41794504050
சந்திரன்(சித்தப்பா) — பிரான்ஸ்
தொலைபேசி:+33605849122
சுதர்சன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779862537